07. அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதிமொழி

இந்த இனிய சுதந்திர தின நன்னாளில்.. அனைத்து இளைஞர்களும் இந்த ஏழு அம்ச உறுதிமொழிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நமது குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.!!
அனைவரும் அவர் சொன்ன வழியில் ஏற்றுக் கொள்வோமாக!!
நாட்டின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று இரவு டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இளைஞர்களுக்கு 7 அம்ச உறுதிமொழியை பிரமாணம் செய்து வைத்தார். அவர் கூறிய 7 அம்சங்கள் வருமாறு:-
7 அம்சங்கள்
1. நான் எனது வாழ்க்கையில் ஓர் இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என உணர்கிறேன். இந்த இலக்கை அடைவதற்கு தேவையான அறிவை பெறுவேன். கடினமாக உழைப்பேன். பிரச்சினைகள் வரும்போது அவற்றை சமாளித்து வெற்றி பெறுவேன்.
2. எனது நாட்டின் இளைய சக்தியாக நான் உழைப்பேன். எடுத்துக் கொண்ட அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவதற்காக துணிவுடன் உழைப்பேன். பெற்ற வெற்றியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாடுவேன்.
3. என்னையும், எனது வீட்டையும், சுற்றுப்புறத்தையும், அண்டைப் பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் எப்போதும் வைத்துக் கொள்வேன்.
4. உள்ளத்தின் நேர்மை குணத்தில் அழகையும், குணத்தின் அழகு வீட்டில் நல்லிணக்கத்தையும், வீட்டின் நல்லிணக்கம் நாட்டில் ஒழுங்கையும், நாட்டின் ஒழுங்கு உலகத்தில் அமைதியையும் கொண்டு வரும் என உணர்ந்துள்ளேன்.
5. ஊழல் இல்லாத நேர்மையான வாழ்க்கை வாழ்வேன். மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குவேன்.
6. நாட்டில் நான் அறிவு தீபத்தை ஏற்றுவேன். அது என்றும் சுடர்விட உறுதி கொள்வேன்.
7. எந்தப்பணி செய்தாலும் அதை செம்மையாக செய்யும் போது 2020-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி பெற்ற இந்தியா என்ற குறிக்கோளை அடைவதற்கு நானும் பங்காற்றுகிறேன் என்பதை உணர்ந்துள்ளேன்.
மேற்கண்ட 7 அம்ச உறுதிமொழியை அப்துல் கலாம் பிரமாணம் செய்து வைத்தார்.
நான் இந்த உறுதிமொழிகளை இன்று ஏற்றுக் கொண்டுவிட்டேன்.. நீங்க..?
1 Comments:
nanum Ettru konten.. VaZhka Bharatham...
Tue Aug 15, 09:49:00 AM GMT+5:30
Post a Comment
<< Home