வலிமையான பாரதம்; வளமான தமிழகம்

Monday, August 14, 2006

06. முதல் குடிமகனுடன் முப்பது நிமிடங்கள் - I


முதல் குடிமகன் அப்துல் கலாமுடன் நடிகர் விவேக் நேர் காணல்.
நன்றி: குமுதம் 09 ஆகஸ்ட் 2006


சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டலாம்! விமானம் ஓட்ட முடியுமா? ஆனால் நான் ராக்கெட்டை விட்டிருக்கிறேன்! புரியவில்லையா! முன்பு ராக்கெட் விஞ்ஞானி. இன்றோ.. நம் பாரதத்தின் ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்!

ஏ.வி.எம் சரவணன் சார்..க்கு தேங்க்ஸ்!.. ஷங்கருக்கு அதை விடப் பெரிய தேங்க்ஸ்!. "சிவாஜி" ஷூட்டிங் டெல்லியில். அங்கு நான் காலையில் வாக்கிங் போனேன். காபி குடிப்பது டெல்லி சரவணபவனில்!

டாக்டர் கலாம் வசிப்பது ராஷ்ட்ரபதி பவனில்!

கம்பீரமான அந்த மாளிகையில்..!

தென்னிந்தியாவில் இருந்து அதுவும் நம் தமிழ்நாட்டில் இருந்து. அதுவும் நம்ம ராமேஸ்வரத்திலிருந்து. ஒரு அறிவியல்வாதி... அரசியல் வாதியின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்!! என்ன ஒரு பெருமை!

யோசித்துக் கொண்டே நடந்து சென்ற நான்.. ஒரு பெரிய சைஸ் (xxxL சைஸ்! வட இந்தியப் பெண்மனியின் மேல் டேஷ் பண்ணிவிட்டேன்! அது வாயில் இருந்து "வண்டி வண்டியாய்" ஹிந்தி.. திட்டித் தீர்த்தார். நான் கண்டுக்கவே இல்லை! எனக்கு ஹிந்தி புரிந்தால் தானே! ஒரே இந்தியா! நானும் இந்தியன்.. அந்தப் பெண்மணியும் இந்தியன்! ஆனால் நான் பேசுவதும் அவர் பேசுவதும் ஒருவருக்கொருவர் புரியவில்லை!...

'விழிகள் பிதுங்கும் மொழிகள் ' - என்று வைரமுத்து ஸ்டைலில் அந்த நிகழ்வுக்குப் பெயர் வைத்தேன்..!

சரி மேட்டருக்கு வருவோம்!

இவ்வளவு தூரம் வந்துட்டோம்! ஜனாதிபதியப் பார்த்தால் என்ன? எனற ஒரு ஐடியா.. என் அடிமனதின் அன் டர்கிரவுண்டில் ஓட.. உடனடியாக முயற்சிகளை ஆரம்பித்த பின்.. அப்பாயிண்ட்மென் டிற்காக விண்ணப்பித்தே! இந்த இடத்தில் காந்தி கண்ணதாசன், ஜனாதிபதி மாளிக திரு. ஷெரிடனுக்கும், திரு பிரசாத்திற்கும் என் கனமான நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறேன்!

இங்கே சிவாஜி சிலை திறந்த அன்று.. அங்கே சிவாஜி ஷூட்டிங்கில் இருந்த எனக்கு, ஜனாதிபதி மாளிகையின் கதவு திறந்தது! .. மாலை 5 மணிக்குச் சந்திப்பு..! சக்தி சுகர்ஸ்பெருமாள்.. பெயருக்கு ஏத்த மாதிரி இனிமையான நண்பர்... அவரே வந்து அழைத்துச் சென்றார். பிரம்மாண்டமான சிவப்புக்கல் கட்டடங்களுக்கு நடுவில்... மிக மிகப்பெரிய ஹால்களைக் கடந்து.. ஏகப்பட்ட செக்யூரிட்டிகளைக் கடந்து.. ஜவான்களைக் கடந்து சென்றபோது ஏற்பட்ட உணர்வுகளை விவரிக்க குமுதம் தனி சப்ளிமெண்ட் போட்டு அதைக் காம்ப்ளிமெண்ட்டாகக் கொடுக்க வேண்டும்.!


என்னை அமரச்செய்து.. தேநீரும்..ஸ்நாக்ஸும் வழங்கினார்கள்! அந்த நேரமும் வந்தது. என்னைத் தனியே உள்ளே அனுப்ப.. அங்கே.. விசாலமான அரையில்... ஒர் ஒரத்தில் போடப்பட்டிருந்த டேபிளின் முன்னே... நம் ஜனாதிபதி கம்பீரமாக.. அறிவின் சொரூபமாக.. ஞான வ்டிவாக அமர்ந்திருந்தார்!!

"குழந்தைகளின் சிநேகிதன்"

"மாணவர்களின் மன்னன்"

"கல்விக் கூடங்களின் கலங்கரை விளக்கம்" என்றெல்லாம் மனம் மைக் பிடித்துப் பேச ஆரம்பிக்க... அதை அவரது சன்னமான குரல் கலைக்கிறது!...


"வாங்க விவேக்" - எழுந்து வருகிறார்.

"காலைத் தொட்டு எழுகிறேன்...

"உட்காருங்க! எப்படி இருக்கீங்க?"

நலம் விசாரிக்கிறார்...

நானும் எப்படி டயலாக்கை ஆரம்பிப்பது என்று தெரியாமல்.. "நீங்க எப்படி இருக்கீங்க!.. உடம்பெல்லாம் செளக்கியமா?" என்று கேட்டு வைக்க, ரெமோ ஸ்டைலில் முடியை ஸ்டைலாக ஒதுக்கிவிட்டுச் சிரிக்கிறார்! அவரே தொடர்கிறார்.

"நிறைய பேரைச் சிரிக்க வைக்கிறீங்க! இந்த் நிமிஷத்தில் எத்தனையோ மில்லியன் பேரு சிரிப்பாங்க இல்லே?"

"ஆமா சார்!"

"என்னைப் பத்தி நிறைய சொல்றீங்க இல்ல!"

"ஆமா சார்!"

"ஏன்?.." சிரிப்பு நிற்கிறது..

"ரொம்ப வருஷத்துக்குப் பிறகு, 'மாணவர்களின் முன்னேற்றம், கல்வி, வளமான வருங்கால இந்தியா' - இதைப் பத்திப் பேசறதுக்கும், செய்யறதுக்கும் ஒருவர் வந்திருக்கீங்க! அதான்" - என்கிறேன்!

"நல்லது.. அப்பா, அம்மா இருக்காங்களா?"

"இருக்காங்க!"

"அவங்களை நல்லாப் பாத்துக்கோங்க!.. என்கிட்டே என்ன கேக்கணும்?"

கேட்க ஆரம்பித்தேன்..

(அடுத்தப் பகுதி இங்கு தொடர்கிறது..)

1 Comments:

Blogger தருமி said...

இங்கே படிக்கத் தருவதற்கு நன்றி

Mon Aug 14, 02:26:00 PM GMT+5:30

 

Post a Comment

<< Home