வலிமையான பாரதம்; வளமான தமிழகம்

Tuesday, August 15, 2006

06. முதல் குடிமகனுடன் முப்பது நிமிடங்கள் - III (நிறைவுப் பகுதி)




அனைவருக்கும் எங்கள் யங் இந்தியா குழு சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துகள்!!



முதல் குடிமகன் அப்துல் கலாமுடன் நடிகர் விவேக் நேர் காணல்.நன்றி: குமுதம் 09 ஆகஸ்ட் 2006 - தொடர்ச்சி.. இத்தொடரின்..


  1. முதல் பகுதியை இங்கு காணலாம்
  2. இரண்டாம் பகுதியை இங்கு காணலாம்

இந்தியாவின் வளர்ச்சி விவசாயம் சார்ந்து இருக்க வேண்டுமா? அல்லது தொழிற்சாலைகள் முலம் அமைய வேண்டுமா?"

"பரப்பளவில் மிகப் பரந்த இந்தியாவில் மக்கள் தொகை அதிகம்தானே இருக்கிறது! எனவே இரண்டுமே முக்கியம்தான். ஆனால் டெக்னாலஜி இரண்டிலுமே முக்கியம், விவசாய விஞ்ஞானிகளும் தொழில் சார்ந்த வல்லுனர்களும் இந்தியாவில் மிகச் சிரந்து விளங்குகிறார்கள். இந்திய விஞ்ஞானிகள் உலகத்தரம் வாய்ந்தவர்கள்"

"ஆமாம் சார்! அக்னிச் சிறகுகள் படிக்கும் போது.. தங்களைப் பற்றியும், தங்கள் கூடப் பணியாற்றிய சக விஞ்ஞானிகளைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.. இன்னொரு முக்கியமான விஷயம்..

மர்ம நாவல்களும், காமிக்ஸும் விரும்பிப் படிக்கும் மாணவ சமுதாயம், கடந்த சில ஆண்டுகளில் அதிகம் படித்த புத்தகம்.. அதிகம் விற்பனையான புத்தகம் 'அக்னிச் சிறகுகள்'தான் சார்"


ஆமோதிக்கும் வகையில் தலையாட்டுகிறார்! திடீரென்று எதையோ யோசித்தாற் போல்...

"நான் சொல்கிறதை எழுதிக்கோங்க"

"மனிதன் சிரித்தால் பெரு வாழ்வு பெறுவான்!
மனிதன் பெரு வாழ்வு பெற்றால் நாடு மலர்ச்சி அடையும்!"

சற்று நேர உரையாடலுக்குப் பின் அடுத்த கேள்விக்குத் தாவுகிறேன்.

"இந்திய மாணவர்களுக்கு எத்துறைப் படிப்பு எதிர் காலத்தில் உதவும்?"

"Knowledge Products"

"அப்படீன்னா?"

"அறிவு சார்ந்த பொருட்கள்! அதைத்தான் இப்போ I.T. என்கிறோம்."

"விவசாயம் தொழில் மற்றும் I.T. மூன்றிலும் கவனம் செலுத்த வேண்டும்."

வேற கேள்வியிருக்கா?"

தயங்கித் தயங்கி கேட்கிறேன் "சார்! சமீபத்தில் DRDO அனுப்பின அக்னியும், ISRO அனுப்பின GSLV யும் தோல்வியடஞ்சிடுச்சி. அப்போ உங்க மனநிலை என்ன?'

சர்று நேரம் ஆழ்ந்து யோசிக்கிறார்! நெடிய பெருமூச்சுக்குப் பிறகு பேசுகிறார்! குரலில் இருந்த குழந்தையின் இயல்பு அகன்றுவிட்டது. ஒரு தேர்ந்த விஞ்ஞானியின் குரலாக அது ஒலிக்கிறது.

"இது ஒரு Rare Occurrence! அபூர்வமாக நடக்கும் குறைபாடு. இது எல்லா தேச விஞ்ஞானிகளுக்கும் ஏற்படக்கூடியது. நான் விஞ்ஞானியாகப் பணி புரிந்தபோது இந்த அனுபவம் எனக்கே ஏற்பட்டது. என்னுடைய குருவும் சீனியர்களும் என்னைத் தேற்றினர். அதையே நானும் இப்போது செய்தேன். உடனடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தைரியம் கொடுத்தேன். நம் விஞ்ஞானிகள் நிச்சயம் வெல்வார்கள். மீண்டும் மீண்டும் வெல்வார்கள்."

"தேங்க் யூ சார்! அப்போ நான் புறப்படவா" என்கிறேன். "ஒரு நிமிடம்" என்றவர் 'Guiding the Souls' என்ற தனது புதிய புத்தகத்தைக் கையெழுத்திட்டுக் கொடுக்கிறார்!"

"போட்டொ எடுத்துக்கலாம்" என்கிறார்.


எடுக்கப் படுகின்றன.

"நிறைய சிரிக்க வையுங்க! செய்தி சொல்லுங்க" என்கிறார்.

அவர் கால் தொட்டு நிமிர்கிறேன்!

திடீரென்று 'இதையும் எழுதிக்கோங்க! இது உங்களுக்கு" என்கிறார்! எழுதினேன்.

'சிரிப்பைக் கொடுப்பவர் ஆண்டவனின் அருள் பெற்றவர்"

உண்மை தான். அருள் பெற்றவனாக வெளியே வந்தேன். தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்கும் ராஷ்ட்ரபதி பவனை மீண்டும் ஒரு முறை அண்ணாந்து பார்த்தேன்"

அது கம்பீரமாக நிற்கிறது! நம் முதல் குடிமகனைப் போல!

கனவு பலிக்கிறது!

வெற்றி நிச்சயம்!!!

3 Comments:

Blogger வடுவூர் குமார் said...

நன்றி நன்றி

Tue Aug 15, 06:40:00 AM GMT+5:30

 
Blogger நாமக்கல் சிபி said...

// நம் விஞ்ஞானிகள் நிச்சயம் வெல்வார்கல். மீண்டும் மீண்டும் வெல்வார்கள்."
//
சத்தியமான வார்த்தைகள்

Tue Aug 15, 08:59:00 AM GMT+5:30

 
Anonymous Anonymous said...

Very nice Blog..
President kanavu palikkum...India Velum..

Tue Aug 15, 10:03:00 AM GMT+5:30

 

Post a Comment

<< Home