
முதல் குடிமகன் அப்துல் கலாமுடன் நடிகர் விவேக் நேர் காணல்.நன்றி: குமுதம் 09 ஆகஸ்ட் 2006 - தொடர்ச்சி..
(இத்தொடரின் முதல் பகுதியை இங்கு காணலாம்)
இன்றைய மாணவர்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ் குடுக்கச் சொன்னா நீங்க என்ன சொல்வீங்க..?
கண்ணோடு கண் பார்க்கிறார்!
சற்று யோசனையில் ஆழ்கிறார்!
இப்போது சொல்கிறார்..
"அறிவு வளர்ச்சி... அது வளர்ந்தாலே எல்லாமே சரியாகிவிடும்!"
"எங்கே பார்த்தாலும் குண்டு வெடிக்குது! வன்முறை தலை விரித்தாடுகிறது. பொது மக்கள் இதுமாதிரி பயங்கரவாதத்தை எப்படி எதிர் கொள்ளவேண்டும்?"
"விவேக், நான் ஒரு இஸ்லாமியராகப் பிறந்தேன். இநதுக்களிடம் வளர்ந்தேன், கிறிஸ்துவப் பள்ளியில் படித்தேன். என் அறையில் ஒரு இந்து, ஒரு கிறிஸ்துவர் என்னுடன் தங்கிப் படித்தனர். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. சகிப்புத்தன்மை இருந்தது. அது போன்ற ஒரு சூழ்நிலை இன்று மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் கிடைக்க வேண்டும்! மனோதிடமும் சகிப்புத்தன்மையுமே பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஆயுதங்கள்!"
"இலக்கை அடைவது எவ்வாறு?.."
சிரிக்கிறார்! சுறுசுறுப்பாகிறார்! எழுத்து செல்கிறார்!.. (மீட்டிங் முடிந்து விட்டதோ என்று நினைக்கிறேன்) தன் மேஜையிலிருந்து ஒரு அட்டையை எடுத்து வருகிறார்! என்னைப் படிக்கச் சொல்கிறார்!!
"லட்சியம் ஊக்கத்தை உருவாக்கும்!
ஊக்கத்தால் உயரிய எண்ணங்கள் மலரும்!
உயரிய எண்ணங்களால் உழைப்புத்திறன் பெருகும்!
உழைப்பு நற்செயல்களுக்கு ஆதாரமாகும்"
-என்று அதில் அச்சிடப்பட்டிருக்கிறது!
"ஏதாவது புரியுதா?.."
"எல்லாமே புரியுது" - என்றேன்
சினிமாவிலே காமெடி மூலமா ஒரு கருத்துச் சொல்லப்படணும்னா.. அது என்னவா இருக்கணும்னு நீங்க விரும்புறீங்க?
"ஊழல் இல்லாத சமுதாயம் வேணும்னு சொல்லுங்க!...
"அது எப்படி சாத்தியமாகும்!?..'
இதே கேள்வியை நான் ஆதிசுஞ்சுணாஞ்சேரி அப்படீங்கற ஊருக்குப் போயிருந்தப்போ 'பவானி' ன்னு ஒரு பொண்ணு என்கிட்டே கேட்டா!.."
"நீங்க என்ன பதில் சொன்னீங்க?'"நான் இப்ப கேட்கப் போறதுக்கு நீங்க சொல்லுங்க! நம்ம நாட்டோட ஜனத்தொகை எவ்வளவு?"
"நூறு கோடியிருக்கலாம்" (இந்நேரத்துக்கு கூட்டினாலும் கூட்டியிருப்பாங்க!)'100 கோடின்னே வெச்சுக்குவோம்.. ஒரு வீட்டுக்கு 5 பேர்னு வையுங்க.. எத்தனை குடும்பம் இருக்கும்?"
(இதென்ன வம்பு? கால்குலேட்டர் கூட எடுத்துட்டு வரலியே!)
"சார் 20 கோடி குடும்பம் சார்!"
"ஒரு குடும்பத்துல 2 குழந்தைகள்னா எவ்வளவு குழந்தைகள்?"
"இருபது இன் ட்டு இரண்டு நாற்பது கோடி சார்!""இந்த நார்பது கோடி பேரும் வளர்ந்து வரும் போது, அவுங்க தேவைகளுக்காக, குடும்பத்துக்காக அவங்க அப்பா, அம்மா லஞ்சம் ஊழல்னு இறங்கிடுறாங்க! அந்த நாற்பது கோடி குழந்தைகளும் தங்களோட அப்பா, அம்மா கிட்டே 'அப்பா .. அம்மா, அங்க நியாயமான வருமானத்திலே என்ன வாங்க முடியுமோ, அதை வாங்கிக் கொடுங்க! லஞ்சப் பணத்திலே, ஊழல்ல வர்ற பணத்தில் எனக்குப் புதுச்சட்டை, சைக்கிள், பிறந்தநாள் பரிசு வேண்டாம்'னு சொல்லக்கூடிய தைரியம்... அது உங்கக் கிட்டே இருக்கா' னு 'பவானி' கிட்டே கேட்டேன்!"
"என்ன ஆச்சு சார்?..."
"ஒரே அமைதி.. கொஞ்ச நேரம் கழிச்சு அந்த 50,000 மாணவர்களும் எழுந்து நின்னு 'நாங்க தயார்'னு சொல்லிக் கைத் தட்டினாங்க! மனசு நிறஞ்சுது...
"இதைப் படத்தில் சொல்லுங்க!"
"சரி சார்! இந்தாங்க இது என் அன்பளிப்பு!" 'The monk who sold his ferrari' என்ற புத்தகத்தை நான் அவருக்குக் கொடுக்கிறேன்!"இது மாதிரி 'புக்ஸ்' கூடப் படிப்பிங்களா?"
"ஆமா சார்!"
"இந்தியாவில் படித்துவிட்டு வெளி நாட்டில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?"
உங்கள் வாழ்க்கையையும் வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளுங்கள! ஆனால் உங்கள் 'அனுபவத்தை' இந்தியாவுக்குக் கொடுங்கள்! நம் தேசத்தின் வளர்ச்சிக்கு அதை உரமாகப் போடுங்கள்!" (தமிழ் வலைப்பதிவாளர்களின் தனிக் கவனத்திற்கு - அன்புடன் சீமாச்சு)
இன்றைய இந்தியாவின் உடனடித்தேவை என்ன?
ஒரே வரியில் பதில் வருகிறது.
"Moral Education"
(நன்மார்க்கக் கல்வி! - மொழி பெயர்ப்புச் சரியா?!)
இந்தியாவின் வளர்ச்சி விவசாயம் சார்ந்து இருக்க வேண்டுமா? அல்லது தொழிற்சாலைகள் முலம் அமைய வேண்டுமா?"
(நிறைவுப் பகுதி இங்கு தொடர்கிறது..)